Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பவர் பாண்டி... ‘சின்ன பாண்டி’யாக நடிக்கிறார் தனுஷ்?
சென்னை: ராஜ்கிரண் நடிப்பில் தான் இயக்கும் முதல்படத்தில் தனுஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவின் பல்வேறு தளங்களில் வெற்றியாளராக இயங்கி வருபவர் தனுஷ். தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள தனுஷ், ராஜ்கிரணை நாயகனாக்கி புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு பவர் பாண்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டண்ட்மேன் ஒருவரைப் பற்றிய கதைக்களம் தான் பவர் பாண்டி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷும் கவுரவத் தோற்றத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ். தற்போது சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இயக்கம் ஒருபுறம் இருக்க, வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொடி' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.