Don't Miss!
- News லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
‘நோ ப்ராப்ளம்’... கன்னடத்தில் சிவ்ராஜ் குமாருக்காக ‘கொலைவெறி’ பாடிய தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் கன்னடப் படமொன்றில் பாடல் பாடியுள்ளார். அப்பாடலின் வரி, ‘நோ ப்ராப்ளம்' எனத் தொடங்குகிறது.
தேசிய விருது வாங்கிய நடிகர் தனுஷ், சிறந்த பாடகர், பாடலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, அவர் தனது புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பலப் படங்களில் பாடியுள்ளார்.
3 என்ற படத்தில் இவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் சென்றது. அதேபோல், அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி' பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப் படும் பாடலாக உள்ளது.
இதனால், தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் பாடும் வாய்ப்பும் தனுஷிற்கு வந்த வண்ணம் உள்ளது. அவற்றில் தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி, பிற மொழிப்படங்களும் அடக்கம்.
நடிப்பில் பிசியாக இருப்பதால், அவற்றில் குறிப்பிட்ட பாடல்களை மட்டுமே தேர்வு செய்து தனுஷ் பாடி வருகிறார். இந்நிலையில், கன்னட படத்திற்காக பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவ்ராஜ் குமார், வஜ்ரகயா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரை பாட வைத்துள்ளனர்.
‘நோ பிராபிளம்' எனத் தொடங்கும் இந்தப் பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.