Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தனுஷ் அமுக்கிய ரூ. 1 கோடி தன்னிடம் அட்வான்ஸாக வாங்கிய ரூ. 1 கோடி பணத்தைத் திருப்பித் தராமல் தனுஷ் இழுத்தடிப்பதாக கஜினி படத்தயாரிப்பாளரான சேலம் சந்திரசேகர் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.கஜினி படம், அப்படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரனை பெரிய அளவில் தூக்கி விட்டுள்ளது. அதற்கு முன்பு அவர்தயாரித்த சுள்ளான் படம் படு மோசமாக ஓடி பெரும் நஷ்டத்தை அவருக்குக் கொடுத்து விட்டது.அதிலிருந்து மீளுவதற்குள் அவர் படாதபாடு பட்டு விட்டார். கிட்டத்தட்ட போண்டி என்ற நிலையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்த சந்திரசேகரை கஜினி வந்து காப்பாற்றி விட்டது. கஜினிக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கிட்டத்தட்ட 4 கோடிவரை பைனான்ஸ் செய்ததாகவும் ஒரு டாக் உள்ளது.இதற்கு நன்றிக் கடனாக, தெலுங்கில் டப் ஆன கஜினியின் ஹைதராபாத் நகர உரிமையை சிரஞ்சீவிக்கு இலவசமாகவேகொடுத்துள்ளாராம் சேலம் சந்திரசேகர். கஜினி கொடுத்த பூஸ்ட்டால் நிமிர்ந்து விட்ட சந்திரசேகர் இப்போது மிகத் தெளிவாகதிட்டமிட்டு அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக இதுவரை ஏற்பட்ட நஷ்டக் கணக்கை பார்த்த போது தனுஷிடம் கொடுத்த ரூ. 1 கோடி அட்வான்ஸ் தொகைஅவருக்கு ஞாபகம் வந்துள்ளது. சுள்ளானைத் தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு படத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக ரூ. 1 கோடி அட்வான்ஸும் கொடுத்திருந்தார். ஆனால் தனுஷுக்கு இப்போது மார்க்கெட் சரிவில் இருப்பதாலும்,கஜினியைத் தொடர்ந்து இனிமேல் வெற்றிப் படங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் தனுஷை வைத்துஎடுக்கவிருந்த படத்தை டிராப் செய்து விட்டாராம். இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தருமாறு தனுஷை அணுகியுள்ளார். ஆனால் தனுஷ், இப்போதுஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் நிமிர்ந்து வருகிறேன். கொஞ்சம்பொறுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நான் படத்தையே டிராப் செய்து விட்டேன். அதனால் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று தனுஷிடம்வலியுறுத்தியுள்ளார் தயாரிப்பாளர். இதையடுத்து சந்திரசேகரை தொடர்பு கொள்வதையை தனுஷ் தவிர்க்க ஆரம்பித்துள்ளாராம்.இதனால் கடுப்பாகிப் போன சந்திரசேகர், தனுஷ் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.
தன்னிடம் அட்வான்ஸாக வாங்கிய ரூ. 1 கோடி பணத்தைத் திருப்பித் தராமல் தனுஷ் இழுத்தடிப்பதாக கஜினி படத்தயாரிப்பாளரான சேலம் சந்திரசேகர் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.
கஜினி படம், அப்படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரனை பெரிய அளவில் தூக்கி விட்டுள்ளது. அதற்கு முன்பு அவர்தயாரித்த சுள்ளான் படம் படு மோசமாக ஓடி பெரும் நஷ்டத்தை அவருக்குக் கொடுத்து விட்டது.
அதிலிருந்து மீளுவதற்குள் அவர் படாதபாடு பட்டு விட்டார். கிட்டத்தட்ட போண்டி என்ற நிலையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்த சந்திரசேகரை கஜினி வந்து காப்பாற்றி விட்டது. கஜினிக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கிட்டத்தட்ட 4 கோடிவரை பைனான்ஸ் செய்ததாகவும் ஒரு டாக் உள்ளது.
இதற்கு நன்றிக் கடனாக, தெலுங்கில் டப் ஆன கஜினியின் ஹைதராபாத் நகர உரிமையை சிரஞ்சீவிக்கு இலவசமாகவேகொடுத்துள்ளாராம் சேலம் சந்திரசேகர். கஜினி கொடுத்த பூஸ்ட்டால் நிமிர்ந்து விட்ட சந்திரசேகர் இப்போது மிகத் தெளிவாகதிட்டமிட்டு அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதற்கு முன்பாக இதுவரை ஏற்பட்ட நஷ்டக் கணக்கை பார்த்த போது தனுஷிடம் கொடுத்த ரூ. 1 கோடி அட்வான்ஸ் தொகைஅவருக்கு ஞாபகம் வந்துள்ளது. சுள்ளானைத் தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு படத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக ரூ. 1 கோடி அட்வான்ஸும் கொடுத்திருந்தார். ஆனால் தனுஷுக்கு இப்போது மார்க்கெட் சரிவில் இருப்பதாலும்,கஜினியைத் தொடர்ந்து இனிமேல் வெற்றிப் படங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் தனுஷை வைத்துஎடுக்கவிருந்த படத்தை டிராப் செய்து விட்டாராம்.
இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தருமாறு தனுஷை அணுகியுள்ளார். ஆனால் தனுஷ், இப்போதுஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் நிமிர்ந்து வருகிறேன். கொஞ்சம்பொறுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் நான் படத்தையே டிராப் செய்து விட்டேன். அதனால் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று தனுஷிடம்வலியுறுத்தியுள்ளார் தயாரிப்பாளர். இதையடுத்து சந்திரசேகரை தொடர்பு கொள்வதையை தனுஷ் தவிர்க்க ஆரம்பித்துள்ளாராம்.
இதனால் கடுப்பாகிப் போன சந்திரசேகர், தனுஷ் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.