Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
த்ருவ் கார் விபத்துக்கு காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமே: விக்ரம் சார்பில் விளக்கம்
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் சென்ற கார் விபத்தில் ஈடுபட்டது வெறும் கவனக்குறைவு தான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் சென்ற கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து விக்ரம் மற்றும் த்ருவ் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சூரிய நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
நடிகர் விக்ரம் மகன் த்ருவ் இன்று அதிகாலையில் ஆட்டோ மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.
நடிகர் விக்ரம் மகன் த்ருவ் அவரின் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
Official word from @sooriaruna on the #DhruvVikram car accident news...#ChiyaanVikram pic.twitter.com/D7Mj91tOm6
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) August 12, 2018
விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.
இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.