Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாங்குநேரி கோவிலுக்குள் சட்டையுடன் போய் விதிமுறைகளை மீறினாரா 'பாபநாசம்' கமல்..?
நாங்குநேரி: பாபநாசம் படப்பிடிப்புக் குழுவினர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். படத்தின் நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட குழுவினர் நாங்குநேரி வாணுமாமலை பெருமாள் கோவிலுக்குள் படப்பிடிப்புக்காக சென்றபோது கோவில் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஏற்கனவே இந்த கோவிலின் ஜீயரை கமல் சந்தித்தது குறித்து பரபரப்பு கிளம்பி உலா வந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலுக்குள் படப்பிடிப்புக் குழுவினர் விதிகளை மீறி நடந்து கொண்டதாக முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.
குற்றாலத்தில் பாபநாசம்
குற்றாலம், மேக்கரை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் பாபநாசம் என்ற படத்தின் படிப்பிடிப்பு நடந்து வருகிறது.
30ம் தேதி நாங்குநேரியில்
இந்நிலையில் 30ம் தேதி நாங்குநேரி பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு நடந்த காலையிலேயே கோயிலில் படப்பிடிப்பு குழுவினர் குவிந்தனர். இதையறிந்த பொதுமக்கள் அங்கு கூடியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
3 மணிக்கு வந்த கமல்
பின்னர் மாலை 3 மணிக்கு கமல் தனது பாதுகாவலர்களுடன் வந்தார். கோயிலுக்கு வெளியே கோபுர வாசலுக்கு வடக்கு பகுதியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலின் உள்பகுதியில் உள்ள மண்டபம் ஓன்றிலும் படப்பிடிப்பு நடந்தது. மேலும் கோயிலின் மூலதானஸ்த்திற்கும் நடிகர் கமலஹாசன் சென்றார். பின்னர் அவர் மடத்தில் உள்ள ஜீயர் சுவாமியை சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
படிப்பிடிப்பு நடந்த போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கவும் அக்குழுவினர் எச்சரித்தனர். இந்நிலையில் அங்கு வந்த கமலஹாசனிடம் கேட்டபோது படப்பிடிப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்.
சட்டை போடக் கூடாது
நாங்குநேரி வாணுமாமலை பெருமாள் கோயிலை பொருத்தவரை கோயிலுக்குள் நுழைய சில விதிமுறைகள் உள்ளன. பெண்கள், 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள், போலீசார் மட்டுமே சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டு. மற்றவர்கள் சட்டையுடன் செல்ல அனுமதி இல்லை.
சட்டையுடன் போன கமல்
இந்த நிலையில் கோயிலுக்குள் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கமலஹாசன், பாதுகாவலர்கள் சட்டையை கழற்றாமலேயே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனம் எழுந்து வருகிறது.
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!