Don't Miss!
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Sports சிக்சர் மன்னன் சிவம் துபே சாதனை.. 27 பந்தில் 66 ரன்கள் குவிப்பு.. 7 சிக்சர் விளாசி ரெக்கார்ட்
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னை தத்தளிக்கையில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை இல்லை: பழம்பெரும் நடிகர் திலீப் குமார்
மும்பை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பட்டபாடை நினைத்து கவலையில் இருப்பதால் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் வரும் 11ம் தேதி தனது 93வது பிறந்தநாளை கொண்டாட வேண்டியது. பாகிஸ்தானில் பிறந்து மும்பையில் செட்டிலான அவருக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும்.
தனது இரண்டாவது இல்லமாக சென்னையை ஆக்க வேண்டும் என்று அவர் கூறுவது உண்டு. அத்தகைய சென்னை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துள்ள இந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
I have decided to forego all celebrations on my birthday as I am saddened by the tragedy that has swept the lives of so many in Chennai.
— Dilip Kumar (@TheDilipKumar) December 8, 2015
சென்னையில் பல உயிர்கள் பலியாகியுள்ளதை நினைத்து நான் கவலையில் உள்ளேன். அதனால் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.