Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அட்டக்கத்திக்கு பிறகு ஒரு நாள் கூத்தில் தான் முதல்முறையாக..: தினேஷ்
சென்னை: அட்டக்கத்தி படத்திற்கு பிறகு தான் தலைமுடியை வாரி நடித்துள்ள படம் ஒரு நாள் கூத்து என்று தினேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ஜே. செல்வகுமார் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஒரு நாள் கூத்து. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. விழாவில் நாயகன் தினேஷ், நாயகிகள் மியா, நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மியா கேரளத்து பெண் என்றாலும் அழகான தமிழில் பேசினார்.
நிகழ்ச்சியில் தினேஷ் பேசுகையில்,
இது என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான டைம். ஏன் என்றால் எல்லாமே செம பாசிட்டிவாக போய்க் கொண்டிருக்கிறது. கூட பக்கத்திலேயே இருந்து பார்க்கையில் செம வைபாக உள்ளது. எப்பவுமே லவ் செமயா ஒர்க் அவுட்டாகும் என்பதை நான் என் கண் முன்பே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
இந்த படத்தில் நிறைய லவ் இருக்கு. அதனால் இது நல்லா இருக்கும். இது யாரையும் ஏமாத்தாது. எனக்கு வரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் தேர்வு செய்து நடிக்கவில்லை ஆனால் அதுவாக நடக்கிறது. அது மாதிரி தான் ஒரு நாள் கூத்தும்.
நெல்சன் நண்பராக அறிமுகமானார். படம் பண்ணலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன். என்னை தாடி எல்லாம் ட்ரிம் செய்து வேறு மாதிரியான லுக்கில் காண்பித்திருப்பார். அட்டக்கத்திக்கு பிறகு முதல்முறையாக நான் முடியை வாரி நடித்த படம். ஜஸ்டின் பிரபாகரன் பாடியது சூப்பராக இருந்தது என்றார்.