Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் கல்யாணம் பண்ணிக்காததுக்கு இதுதான் காரணம்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரீசன் என்னன்னு தெரியுமா?
சென்னை : இயக்குநரும் பிரபல நடிகருமான எஸ்ஜே சூர்யா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
வாலி, குஷி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து தன்னுடைய நடிப்பிலேயே இவர் பல படங்களை கொடுத்துள்ளார்.
இதனிடையே 54 வயதாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் எஸ்ஜே சூர்யாவிற்கு திருமணம் என்று சமீபத்தில் தகவல்கள் பரவின.
கொச்சி விமானநிலையத்தில் நடிகர் சூர்யா.. சூர்யா42 சூட்டிங்கிற்காக சென்றாரா?
சிறப்பான இயக்குநர்
வாலி, குஷி என சிறப்பான படங்களை கொடுத்துள்ளவர் எஸ்ஜே சூர்யா, அஜித் மற்றும் விஜய்க்கு இந்தப் படங்கள் சிறப்பான படங்களாக அமைந்தன. அவர்களின் கேரியர் பெஸ்டிலும் இந்தப் படங்களுக்கு இடமுண்டு. இதையடுத்து தானே ஹீரோவாக நடித்தும் சில படங்களை இயக்கி வெற்றிப் பெற்றார் எஸ்ஜே சூர்யா.
நடிகராக மாறிய எஸ்ஜே சூர்யா
தொடர்ந்து இயக்கத்தில் கலக்கிவந்த இவர் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி, தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். சிறப்பான திரைக்கதையால் படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்வித்த எஸ்ஜே சூர்யா தற்போது தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
சிறப்பான வரவேற்பு
இவரது சமீபத்திய படங்கள் மாநாடு, டான் போன்றவை மிகச்சிறந்த விமர்சனங்களை இவருக்கு பெற்றுத் தந்தன. முன்னதாக இறைவி, மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்துள்ளார்.
திருமணம் குறித்த விளக்கம்
தான் பெரிய அளவிலான சரிவுகளை சந்தித்த நிலையில் தனக்கு திருமணம் நடந்திருந்தால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளையும் அது பாதித்திருக்கும் என்றும் இதன் காரணமாகவே தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தான் சிங்கிளாக இருந்தால் தான் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கமிட்மெண்ட் குறித்த யோசனை
தன்னுடைய சரிவின்போது தான் சிங்கிளாக இருந்தால் ஒரு ஹோட்டலில் சென்று வேலை செய்ய முடியும், திடீரென சென்று நடிக்க முடியும், அமிதாப்பிடம் சென்று அடுத்த படத்திற்கான கால்ஷீட் கேட்க முடியும் எதை வேண்டுமானாலும் திட்டமிடாமல் செய்ய முடியும். ஆனால் திருமணம் நடந்தால் தன்னுடைய குடும்பத்தினர் குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.