Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகை நண்பர் சோ ஆகியோர் காலமான இந்த நேரத்தில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 12ம் தேதி வந்தால் ரஜினி ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. தங்கள் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
இந்நிலையில் தான் ரஜினியிடம் இருந்து ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிஆர்ஓ இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
Announcement :- #Thalaivar @superstarrajini requests his fans not to celebrate his birthday and avoid keeping banners & posters.
— RIAZ K AHMED (@RIAZtheboss) December 9, 2016
அறிவிப்பு: தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தலைவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அவர் இறந்த இரண்டாவது நாள் பத்திரிகையாளரும், ரஜினியின் நண்பருமான சோ காலமானார். இதை எல்லாம் மனதில் வைத்து தான் ரஜினி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.