மேலும் ஒரு கன்னட நடிகர் மீது மனைவி வரதட்சணை புகார்

By Shankar

Kannada Actor Prashanth
மேலும் ஒரு நடிகர் மீது வரதட்சணைப் புகார் எழுந்துள்ளது. கன்னட நடிகர் பிரசாந்த் தன்னை வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்துவதாக அவர் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இது போல் இன்னொரு கன்னட நடிகரான பிரசாந்தும் வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். ஓரட்டா ஐலவ்யூ, வெங்கி, அஞ்சதிரு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அவரால் பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. படத் தயாரிப்பிலும் இறங்கினாராம். இதனால் பணக் கஷ்டம் ஏற்பட்டது. மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் நல ஆணையத்தில் பிரசாந்த் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் வரதட்சணை கேட்டு என்னை தினமும் சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரசாந்தும் சசிரேகாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X