Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
10 பிறவி எடுத்தாலும் அப்பா போல நடிக்க முடியாது… துல்கர் சல்மான்
இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது என்று நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கூறியுள்ளார். ராம்கோபால் வர்மாவின் கிண்டல் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஓ காதல் கண்மணி'. தெலுங்கில் ‘ஓகே பங்காரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
கதை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் காதலும், துல்கர், நித்யாவின் இளமையான நடிப்பும் விமர்சகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ராம்கோபால் வர்மா சர்ச்சை
சினிமாவோ அரசியலோ சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'ஓ காதல் கண்மணி' படத்தையும் விட்டுவைக்கவில்லை.
|
ஓ காதல் கண்மணி
காதல் கண்மணி' படத்தைப் பார்த்துவிட்டு "இப்போதான் மணிரத்னத்தின் படத்தைப் பார்த்தேன்.
|
துல்கர் சல்மானுக்கு விருது
விருது வழங்குபவர்களுக்கு சிறிதளவேனும் நியாய உணர்வு இருந்தால், மம்முட்டிக்கு வழங்கிய விருதுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவரது மகன் துல்கர் சல்மானுக்கு வழங்கிவிடுவார்கள்.
|
மம்முட்டி வெறும் ஜூனியர்தான்
அவரது மகனோடு ஒப்பிடும்போது மம்முட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்டே. தனது மகனிடமிருந்து மம்முட்டி நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, யதார்த்தமான நடிப்பை.
|
துல்கருக்கு பெருமை
கேரள மாநிலத்தை மற்ற இடங்களில் பெருமையைடையச் செய்ய பல வருடங்களாக மம்முட்டியால் முடியவில்லை, அதை இன்னும் சில வருடங்களில் மம்முட்டியின் மகன் செய்துவிடுவார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் ராம் கோபால் வர்மா.
துல்கர் சல்மான் பதில்
ராம் கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான், உடனடியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். "இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
மல்லுவுட் பிரபலபங்கள்
ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் மலையாள திரை நட்சத்திரங்களும் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஸ்டேட்டஸ் போட்டே தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி வருகிறாரோ ராம்கோபால் வர்மா என்று கிண்டலடித்துள்ளனர்.