Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓ காதல் கண்மணி நாயகன் துல்கரின் 29 வது பிறந்தநாள் இன்று
திருவனந்தபுரம்: ஓ காதல் கண்மணி மற்றும் வாயை மூடி பேசவும் போன்ற தமிழ் படங்களில் நடித்து ஏராளமான இளம் ரசிகைகளின் நெஞ்சங்களைக் கவர்ந்த மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மானின் 29 பிறந்த தினம் இன்று.
1986 ம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் மம்முட்டி - சல்பத் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த துல்கர் சல்மான் 2012 ம் ஆண்டில் செகண்ட் ஷோ என்ற முதல் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.
நடிக்க வந்து 3 வருடங்களில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சேர்த்து சுமார் 17 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமான துல்கருக்கு அந்த படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
ஆனால் மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்து வந்த ஓ காதல் கண்மணி திரைப்படம் தமிழில் நல்ல ஹிட் அடித்ததுடன், தமிழ் ரசிகர்களிடம் துல்கரை கொண்டு சேர்த்த விதத்திலும் பெரிதும் உதவியிருக்கிறது.
உஸ்தாத் ஹோட்டல் மற்றும் பெங்களூர் டேஸ் போன்ற சிறந்த படங்களில் நடித்த துல்கர், தமிழில் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்க விருக்கிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கரை மற்றவர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்...பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான்.