Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வளர வேண்டாம் செல்லம்.. எங்க குழந்தையாவே இரு.. மகளின் பிறந்தநாளில் உருக்கமாக வாழ்த்து சொன்ன துல்கர்!
சென்னை: மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் போஸ்ட் பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் வரனே அவஷியமுண்டு. இந்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைக்கப்பட்டதால் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து அது சம்பந்தமாக மன்னிப்பு கேட்டார் துல்கர் சல்மான். தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் துல்கர் சல்மான் தனது மனைவி அமல் சூஃபியா மற்றும் மகள் மரியம் அமீராவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
வீட்டிலேயெ பார்ட்டி.. தம்மாத்துண்டு டிரெஸ்ல இன்னாம்மா டான்ஸ் ஆடுறாரு அமலா பால்.. இதுதான் காரணமாம்!
பிறந்தநாளில் உருக்கம்
இந்நிலையில் துல்கர் சல்மான் நேற்று அவரது மகள் மரியமின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள துல்கர் சல்மான், மகள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
நடிக்க வைக்கிறாய்
அவர் பதிவிட்டிருப்பதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங் மேரி. "நான் இப்போது ஒரு பெரிய பெண்!" என்று நீங்கள் வற்புறுத்தி எங்கள் எல்லோரையும் உங்கள் வயதை போல் நடிக்க வைக்கிறாய். ஒருவேளை நீ சொல்வது சரிதான்.
முழுசா பேசுகிறீர்கள்
நீங்கள் வேகமாக வளர்ந்து வருகிறீர்கள், இப்போது முழு வாக்கியங்களில் பேசுகிறீர்கள். உங்களுக்கு 3 வயதாகிவிட்டது. நீங்கள் இப்போது ஒரு பெரிய பெண். உங்கள் இளவரசி ஆடைகளில் சுழலுகிறீர்கள். இப்போது நீங்களே சொந்தமாக விளையாட்டுக்களை உருவாக்குகிறீர்கள்.
சொந்தமாக நடக்கிறீர்கள்
எங்களுக்கு கதைகளைச் சொல்கிறீர்கள், நீங்கள் இப்போது பெரிய பெண். நீங்களே சொந்தமாக நடக்கிறீர்கள்.. ஓடுகிறீர்கள்.. எப்படி குதிப்பது என்பதைக் கற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் இப்போது ஒரு பெரிய பெண்.மெதுவாக வளருங்கள் டார்லிங் மேரி, இன்னும் ஒரு குழந்தையாக இருங்கள்.
குழந்தையாக இருங்கள்
நாங்கள் உங்களை முதன்முதலில் பார்த்த நாள் போல. அதாவது உங்களை முதலில் பார்த்தது மற்றும் உங்கள் அழுகையை முதல் முறையாகக் கேட்டது. முதல் முறையாக ஒரு தேவதையை சந்திக்க அவர்கள் ஹாலில் திரண்ட நாள். இன்னும் அந்த பெண் குழந்தையாக இருங்கள், அதுவே எங்களுக்கு போதுமானது.
குழந்தையாகவே இரு
என்றென்றும் நீங்கள் எங்களுக்கு குழந்தைதான், உலகமே அவள் இப்போது ஒரு பெரிய பெண் என்று சொன்னாலும். வேகமாக வளர வேண்டாம், டார்லிங் மேரி, எங்கள் பெண் குழந்தையாகவே இன்னும் இருங்கள்.. இவ்வாறு தனது மகளின் மீது அதீத பிரியம் கொண்ட ஒரு அப்பாவாக உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் துல்கர்.
பிரபலங்கள் வாழ்த்து
அவரது இந்த பதிவை இதுவரை சுமார் 12 லட்சம் பேர் வரை லைக் செய்துள்ளனர். மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் துல்கரின் மகள் மரியத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழ் திரைத்துறையை சேர்ந்த விக்ரம் பிரபு, டிடி உள்ளிட்டட ஏராளமானோர் துல்கரின் மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.