Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்பாவின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ ரீமேக்கில் நடிக்க ஆசை: கௌதம் கார்த்திக்
சென்னை: மணிரத்னத்தின் 'கடல்' படம் மூலம் அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்.
'கடல்' படத்துக்குப் பிறகு கைவசம் மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார். அதில் ஒன்று தான் 'என்னமோ ஏதோ'. இது, 'ஆலாம் மொதலந்தி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
இதில், கவுதம் கார்த்திக் ஜோடிகளாக நிகிஷா பட்டேல், ரகுல் ப்ரீத் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட கௌதம் கார்த்திக் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
ஆசை....
யாருடன் ஜோடி சேர ஆசை?
குறிப்பிட்டு யாரும் இல்லை. எல்லா நடிகைகளுடனும் சேர்ந்து நடிக்கவே அசை.
காதல் மன்னன்...
அப்பா மாதிரி காதல் மன்னராக வருவீர்களா?
காதல் படங்கள் மட்டுமின்றி எல்லா படங்களிலும் நடிக்கவே அசைப் படுகிறேன்.
ரீமேக்...
தாத்தா, அப்பா படங்களில் எதை ரீமேக் செய்ய ஆசை ?
தாத்தா படங்கள் அதிகம் பார்க்கல. ஆனா அப்பா படங்கள்ல பிஸ்தா, உள்ளத்தை அள்ளித்தா ரெண்டுலயும் நடிக்கணும்னு ஆசை. ரெண்டுமே ஊட்டியில எடுத்த படங்கள். அவ்வளோ நல்லா இருக்கும்.
வருத்தப்படாத வாலிபர்....
‘கடல்' ஓடவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?''
‘கடல்' படம் வெற்றி பெறாதது பற்றி நான் வருத்தப்படவில்லை. மணிரத்னம் டைரக்ஷனில் நடித்ததே போதும். எனக்கு அந்த படம் பிடித்து இருந்தது.
இவ்வாறு கெளதம் கார்த்திக் கூறியுள்ளார்.