கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்தில் முன்னாள் 'கனவுக் கண்ணன்'!
சென்னை: வெற்றிப்பட இயக்குநராக அறியப்பட்ட கே.எஸ்.ரவிகுமார் தான் இயக்கும் எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் முகாம் காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். லிங்கா படத்தின் தோல்விக்குப் பிறகு நிறைய படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார்.
'தங்கமகன்', 'ரெமோ' எனச் சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். இப்போது 'பள்ளி பருவத்திலே' படத்தில் ஆசிரியராக நடித்திருக்கிறார். இந்நிலையில், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஜெயசிம்ஹா என்ற படத்தையும் இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.

அந்தப் படத்தை அடுத்து தமிழில் அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது 'சதுரங்கவேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

அந்தப் படங்கள் முடிந்ததும், இந்த ஆண்டு இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்தப் படம் போலீஸ் கதையைக் கொண்டு உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











