Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு நடிப்பு தான், அரசியல் எல்லாம் வேண்டாம்: சொல்கிறார் நடிகர் சன்னி தியோல்
மும்பை: தான் அரசியலுக்கும் வரவில்லை, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று பாலிவுட் நடிகர் சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாஜகவில் சேர்வார் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து சன்னி தியோல் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
அரசியல்
எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் ஒரு நடிகன், தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறேன். என் தந்தையும், நடிகருமான தர்மேந்திரா அரசியலில் சேர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை பார்த்துள்ளேன். (தர்மேந்திரா கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.)
தர்மேந்திரா
என் தந்தை அரசியலில் ஈடுபட்டு ஒரு வேலையை முடிக்க பலரை எதிர்பார்த்திருக்க வேண்டியதை நான் பார்த்துள்ளேன். அப்படி இருக்க நான் ஏன் அரசியலுக்கு போக வேண்டும்?
பாஜக
உத்த பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் சத்யபால் சிங்கின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டேன். அது அவருக்காக தானே அன்றி கட்சிக்காக இல்லை. அவர் மும்பையின் கமிஷனராக இருந்தபோது தனது பணியை செவ்வனே செய்தவர். தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுள்ளார்.
மோடி
பிரதமர் பதவிக்கு யார் சரியான நபர் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஒரு மாற்றம் தேவை.(மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பேச சன்னி மறுத்துவிட்டார்)
வாக்கு
அனைவரும் வாக்களியுங்கள் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன். வாக்களித்து சரியான நபர்களை தேர்வு செய்யுங்கள். வாக்களிப்பது முக்கியமான ஒன்று என்றார் சன்னி தியோல்.