Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழில் களமிறங்கும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில்
சென்னை: மோகன் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் மற்றொரு புதுவரவாக மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்திருக்கிறார்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
'தனி ஒருவன்' வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்ததை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு ஆச்சரியமாக மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் நல்ல படங்களாக தேடித்தேடி நடித்து வரும் பஹத், இப்படத்தின் மூலம் தன்னுடைய தமிழ் அறிமுகத்தைத் தொடங்குகிறார்.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. தனி ஒருவனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.