Don't Miss!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Finance ஏசி இல்லாம வெளியே போகமாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? உங்களுக்கு தான் இந்த அப்டேட்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழில் களமிறங்கும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில்
சென்னை: மோகன் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் மற்றொரு புதுவரவாக மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்திருக்கிறார்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
'தனி ஒருவன்' வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்ததை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு ஆச்சரியமாக மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் நல்ல படங்களாக தேடித்தேடி நடித்து வரும் பஹத், இப்படத்தின் மூலம் தன்னுடைய தமிழ் அறிமுகத்தைத் தொடங்குகிறார்.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. தனி ஒருவனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.