Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
டெண்டுல்கர் ஓய்வை கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டது- அமிதாப்
மும்பை: சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பைக் கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டதைப் போலிருந்தது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
தெண்டுல்கர் 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நிருபர்களிடம் கூறுகையில், "'டெண்டுல்கர் 200-வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டது போல உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயதுடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன்.
இந்திய கிரிக்கெட்டில் அவர் பணியை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.
என்றுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.. கிரிக்கெட்டுக்கே அடையாளமாக மாறியவர். அவரைப் பொறுத்தவரை இந்த ஓய்வு என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராததுதான்.
ஆனால் அவர் போனபிறகு, இந்த கிரிக்கெட் அதே சிறப்புடன் இருக்குமா என்பதை கற்பனை செய்யும் முடியவில்லை.
டெண்டுல்கரின் ஆட்டம், அவர் நிகழ்த்திய சாதனைகளை வேறு எந்த தனி வீரருடனும் ஒப்பிடவே முடியாது.
அவர் ஆட்டத்தில் எது சிறந்தது என்று கேட்க வேண்டாம். காரணம் அவர் விளையாடிய அத்தனை தருணங்களும் அற்புதமானவை.
அவரை வாழ்த்துகிறேன்," என்றார் அமிதாப்.