Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெண்டுல்கர் ஓய்வை கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டது- அமிதாப்
மும்பை: சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பைக் கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டதைப் போலிருந்தது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
தெண்டுல்கர் 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நிருபர்களிடம் கூறுகையில், "'டெண்டுல்கர் 200-வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டது போல உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயதுடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன்.
இந்திய கிரிக்கெட்டில் அவர் பணியை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.
என்றுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.. கிரிக்கெட்டுக்கே அடையாளமாக மாறியவர். அவரைப் பொறுத்தவரை இந்த ஓய்வு என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராததுதான்.
ஆனால் அவர் போனபிறகு, இந்த கிரிக்கெட் அதே சிறப்புடன் இருக்குமா என்பதை கற்பனை செய்யும் முடியவில்லை.
டெண்டுல்கரின் ஆட்டம், அவர் நிகழ்த்திய சாதனைகளை வேறு எந்த தனி வீரருடனும் ஒப்பிடவே முடியாது.
அவர் ஆட்டத்தில் எது சிறந்தது என்று கேட்க வேண்டாம். காரணம் அவர் விளையாடிய அத்தனை தருணங்களும் அற்புதமானவை.
அவரை வாழ்த்துகிறேன்," என்றார் அமிதாப்.