twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெண்டுல்கர் ஓய்வை கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டது- அமிதாப்

    By Shankar
    |

    மும்பை: சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பைக் கேட்டதும் என் இதயமே நின்றுவிட்டதைப் போலிருந்தது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

    தெண்டுல்கர் 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நிருபர்களிடம் கூறுகையில், "'டெண்டுல்கர் 200-வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டது போல உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயதுடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன்.

    Amitabh Bachchan and Sachin Tendulkar

    இந்திய கிரிக்கெட்டில் அவர் பணியை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

    என்றுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.. கிரிக்கெட்டுக்கே அடையாளமாக மாறியவர். அவரைப் பொறுத்தவரை இந்த ஓய்வு என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராததுதான்.

    ஆனால் அவர் போனபிறகு, இந்த கிரிக்கெட் அதே சிறப்புடன் இருக்குமா என்பதை கற்பனை செய்யும் முடியவில்லை.

    டெண்டுல்கரின் ஆட்டம், அவர் நிகழ்த்திய சாதனைகளை வேறு எந்த தனி வீரருடனும் ஒப்பிடவே முடியாது.

    அவர் ஆட்டத்தில் எது சிறந்தது என்று கேட்க வேண்டாம். காரணம் அவர் விளையாடிய அத்தனை தருணங்களும் அற்புதமானவை.

    அவரை வாழ்த்துகிறேன்," என்றார் அமிதாப்.

    English summary
    Megastar Amitabh Bachchan is disappointed over master blaster Sachin Tendulkar's decision to call it quits after his 200th Test match."When I heard this news, I felt my heart beat has stopped... the heart beat of Indian cricket has stopped," Bachchan told reporters here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X