Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த அஜீத்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் புரட்சி நடந்து வருகிறது. தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை நாடே கூர்ந்து கவனித்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திரையுலகினர் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பெப்சி ஆட்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ரஜினி, கமல், சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அஜீத் மட்டும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் அவர் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவிக்க உள்ளாராம்.