Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கஜா புயல்: ரூ. 25 லட்சம் அளித்த விஜய் சேதுபதி.. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அளித்த ஜி.வி.பிரகாஷ்!
கஜா புயல் நிவாரணப் பொருட்களை இரண்டு லாரிகளில் அனுப்பி வைத்தார் ஜி.வி.பிரகாஷ்.
Recommended Video
சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்தை வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல், டெல்டா மாவட்டங்களுக்கு இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
கஜா புயலால் நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நிறைய பேர் தங்களால் முடிந்த உதவிகளை அம்மாவட்ட மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
இதேபோன்று தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சத்தை வழங்கி இருக்கிறார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன் .
அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம். பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம்", என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.