Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கஜா புயல்: ரூ. 25 லட்சம் அளித்த விஜய் சேதுபதி.. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அளித்த ஜி.வி.பிரகாஷ்!
கஜா புயல் நிவாரணப் பொருட்களை இரண்டு லாரிகளில் அனுப்பி வைத்தார் ஜி.வி.பிரகாஷ்.
Recommended Video
சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்தை வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல், டெல்டா மாவட்டங்களுக்கு இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
கஜா புயலால் நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நிறைய பேர் தங்களால் முடிந்த உதவிகளை அம்மாவட்ட மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
இதேபோன்று தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சத்தை வழங்கி இருக்கிறார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன் .
அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம். பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம்", என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.