Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கஜா: சிம்பு சொல்லும் பலே யோசனை- செல்போன் நெட்வொர்க்குகள், இபிஎஸ் அரசு ஏற்குமா?
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய சிம்பு ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
நிதியுதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகிறார்கள். இது போன்று எப்பொழுது நடந்தாலும் பலரும் உதவி செய்கிறார்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய நினைத்தாலும் நாம் கொடுக்கும் காசு அங்கு போய் சேர்கிறதா இல்லையா, சேர்ந்த காசு அவர்களுக்கு எப்படி உதவியாக உள்ளது என்பது எல்லாம் நமக்கு தெரிவது இல்லை. இது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டே இருக்கு.
தமிழக மக்கள்
தமிழக மக்கள் அனைவரும் உதவி செய்ய எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அது என்னவென்றால், நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம் , ஒரு காலர் டியூனுக்கு 10 ரூபாய் செலவு செய்கிறோம். இயன்றவர்கள் 100 ருபாயோ, இல்லாதவர்கள் 10 ரூபாயோ செல்போன் நெட்வொர்க் மூலம் கொடுக்க முடியும்.
|
அரசு
எல்லா நெட்வொர்க்கும் சேர்ந்து யார், யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டி, அதை அரசு ஏற்று அந்த பணத்தை டெல்டா பகுதிக்கு இப்படி செலவு செய்தோம் என்ற கணக்கு காட்டுவதாக இருந்தால் இந்த விஷயத்தை செய்யலாம் என்பதை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் தெரிவித்துள்ள ஐடியா சரியாக இருந்தால் #UniteForHumanity #UniteForDelta என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யுங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் நாம் நன்கொடை அளித்து உதவி செய்வோம் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
சிம்புவின் ஐடியாவுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் லட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகிறார்கள். இந்நிலையில் சிம்புவின் யோசனை சரியானதாக உள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?