Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கஜா: சிம்பு சொல்லும் பலே யோசனை- செல்போன் நெட்வொர்க்குகள், இபிஎஸ் அரசு ஏற்குமா?
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய சிம்பு ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
நிதியுதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகிறார்கள். இது போன்று எப்பொழுது நடந்தாலும் பலரும் உதவி செய்கிறார்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய நினைத்தாலும் நாம் கொடுக்கும் காசு அங்கு போய் சேர்கிறதா இல்லையா, சேர்ந்த காசு அவர்களுக்கு எப்படி உதவியாக உள்ளது என்பது எல்லாம் நமக்கு தெரிவது இல்லை. இது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டே இருக்கு.
தமிழக மக்கள்
தமிழக மக்கள் அனைவரும் உதவி செய்ய எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அது என்னவென்றால், நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம் , ஒரு காலர் டியூனுக்கு 10 ரூபாய் செலவு செய்கிறோம். இயன்றவர்கள் 100 ருபாயோ, இல்லாதவர்கள் 10 ரூபாயோ செல்போன் நெட்வொர்க் மூலம் கொடுக்க முடியும்.
|
அரசு
எல்லா நெட்வொர்க்கும் சேர்ந்து யார், யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டி, அதை அரசு ஏற்று அந்த பணத்தை டெல்டா பகுதிக்கு இப்படி செலவு செய்தோம் என்ற கணக்கு காட்டுவதாக இருந்தால் இந்த விஷயத்தை செய்யலாம் என்பதை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் தெரிவித்துள்ள ஐடியா சரியாக இருந்தால் #UniteForHumanity #UniteForDelta என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யுங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் நாம் நன்கொடை அளித்து உதவி செய்வோம் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
சிம்புவின் ஐடியாவுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் லட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகிறார்கள். இந்நிலையில் சிம்புவின் யோசனை சரியானதாக உள்ளது.
-
Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!