ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ...
சென்னை: ஊருக்கெல்லாம் தலைவர் என்றால் ரஜினிகாந்த். ஆனால் அவரது மருமகன் தனுஷுக்கோ கவுண்டமணி தான் தலைவராம்.

தலைவா படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் விஜய்யை தலைவா என்று அழைக்கிறார்கள். அதே சமயம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் தலைவர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.
ஆங்கில பத்திரிக்கைகளும் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிடுகின்றன. இப்படி ஊருக்கெல்லாம் 'தலைவர்' ரஜினியாக இருக்க அவரது மருமகன் தனுஷுக்கோ தலைவர் என்றால் அது கவுண்டமணியாம்.
கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி தனுஷ் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளதாவது,
எனது ஆல் டைம் பிடித்த நடிகர், என் தலைவர், தி ஒன் அன்ட் ஒன்லி கவுண்டமணி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











