''ரஜினி ஜோக்ஸ் போடுவதை நிறுத்துங்க, இல்லாட்டி அவர் இன்டர்நெட்டை டெலீட் செஞ்சிடுவார்''
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் உலா வரும் சில ஜோக்குகளை பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் ஏராளமான ஜோக்குகள் உள்ளன. காலத்திற்கேற்ப இந்த ஜோக்குகளை மாற்றி எழுதி அப்லோட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி பற்றிய சில லேட்டஸ்ட் ஜோக்குகளை பார்ப்போம்.

கால்குலேட்டர்
மக்கள் பிளாக்பெரி, ஐபோன், ஐபேட் உள்ளிட்டவைகளை வைத்து தான் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள். ஆனால் ரஜினிகாந்தோ கால்குலேட்டரை வைத்து ஸ்டேட்டஸை அப்டேட் செய்வார்.

எஜமானர் ஜாக்கிரதை
ரஜினிகாந்த் வீட்டில் இருக்கும் நாயின் கூடாரத்தில் உள்ள பலகையில் எழுதி இருக்கும் வாசகம், 'எஜமானர் ஜாக்கிரதை'.

நேரம்
ஒரு முறை ரஜினி நேரத்துடன் ஓட்டப் பந்தயம் ஓடினார். முடிவு நேரம் இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஊதுபத்தி
கலிலியோ விளக்கு வெளிச்சத்தில் படித்தார். கிரஹாம் பெல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தார். ஷேக்ஸ்பியர் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்தார். ஆனால் ரஜினி ஊதுபத்தி வெளிச்சத்தில் படித்தார்.

மாணவர்
ரஜினிகாந்த் மாணவராக இருக்கையில் ஆசிரியர்கள் வகுப்பை கட் அடித்துவிடுவார்கள்.

விளையாட்டு
விளையாடும்போது ரஜினிகாநத் ஒரு பெண்ணை பார்த்து சிலை என்று கூறினார். அது தான் தற்போது சுதந்திர தேவி சிலை என்று அழைக்கப்படுகிறது.

மழை
மழைக்காலத்தில் ரஜினி கிரிக்கெட் விளையாடினார். அவர் விளையாடியதால் மழை கேன்சல் செய்யப்பட்டது.

வாக்கிங்
ஒரு நாள் ரஜினி காலையில் வாக்கிங் சென்றார். மதியம் போலீசார் அவரை கைது செய்தனர். காரணம் அவர் விசா இல்லாமல் அமெரிக்காவுக்கே நடந்து சென்றுவிட்டார்.

ஆங்கிலேயர்கள்
ஆங்கிலேயர்கள் 1947ம் ஆண்டில் இந்தியாவை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்று தெரியுமா? ஏனென்றால் 1950ல் ரஜினி பிறக்கப் போகிறார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

ஜோக்ஸ்
தயவு செய்து ரஜினி பற்றி ஜோக்ஸ் சொல்வதை நிறுத்துங்கள். இல்லை என்றால் அவர் இன்டர்நெட்டை டிலீட் செய்துவிடுவார்.


Click it and Unblock the Notifications











