Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பசுக்கன்றுகள் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்: ஹாட்ஸ் ஆஃப்
Recommended Video
சென்னை: நடிகர் ஜி.வி. பிரகாஷ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வருகிறார்கள். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இரண்டு லாரிகள் நிறைய நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
மேலும் களத்தில் இறங்கியும் உதவி செய்து வருகிறார்.
பசுக்கன்றுகள்
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ் கஜா புயலால் வீடு, உடைமைகளை இழந்து வாடும் பெண்கள் 500 பேருக்கு பசுக்கன்றுகளை வழங்கினார். ஜி.வி. பிரகாஷ் செய்த இந்த உதவியை அவரின் ரசிகர்கள் தவிர்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வாழ்வாதாரம்
விவசாய மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கவே 500 பசுக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த இது உதவி செய்யும். விவசாயத்திற்கு தேவையான மரக்கன்றுகள், சாகுபடி செலவு, கால்நடைகள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் செய்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அச்சம் நீங்கி தன்னம்பிக்கை பெறுவார்கள் என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அரசுகள்
மத்திய, மாநில அரசுகள் தங்களின் பணிகளை முடுக்கிவிட வேண்டும். மின்சாரம் இல்லாமல் கிராமங்கள் இருளில் உள்ளன. அவர்கள் விரைவில் வெளிச்சத்தை பார்க்க உதவ வேண்டும். கலப்பை மக்கள் இயக்கத்தினர் பசுக்கன்றுகளை சேகரித்துக் கொடுத்தனர் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.
|
பாராட்டு
வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வந்து குவிகின்றது. வாழ்த்துக்கள் ஜி.வி. பிரகாஷ். உங்களின் நற்பணி தொடரட்டும்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!