Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷூட்டிங்கின்போது ரவுடிகள் கூட்டத்தில் சிக்கிய ஆர்யாவின் காதலி.. ஓடிச் சென்று காப்பாற்றிய ஜிவிபி
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் படப்பிடிப்பின் போது நிஜ ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: படப்பிடிப்பின் போது உண்மையாக நடைபெற்ற தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் அபர்ணதி ஆகியோர் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ஜெயில். ஜி.வி.க்கு ஜோடியாக ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி நடிக்கிறார்.
சென்னையில் நடக்கும் ரவுடியிசத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், சென்னை ஓஎம்ஆரில் உள்ள கண்ணகி நகரில் படமாக்கப்பட்டு வருகிறது.
கண்ணகி நகர் என்றாலே அடிக்கடி நாம் செய்திகளில் படிப்பது, அடிதடி, கேங்வார் தான். இந்நிலையில், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி சம்பந்தப்பட்ட காட்சி அங்கு படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, இருகோஷ்டிகளுக்கு இடையே நிஜமாகவே சண்டை ஏற்பட்டிருக்கிறது. கத்தி, அரிவாள், கம்போடு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
இதை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தில் இருந்து தப்பியோடினர். உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷும், அபர்ணதியும் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். நிஜ பைட் இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் வசந்தபாலன்.
இந்த சம்பவம் குறித்த தகவலை படக்குழுவினர் தற்போது கசியவிட்டிருக்கின்றனர். படத்துக்கு இதுவும் ஒரு பப்ளிசிட்டியாக இருக்கும் என அவர்கள் நினைத்திருப்பார்கள் போல. எது எப்படி இருந்தாலும், இத்தனை ஆபத்தான சூழ்நிலையிலும் அபர்ணதியை காபந்து செய்த ஜி.வி.பிரகாஷை பாராட்டியே தீரவேண்டும்.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு