Rayan - அட ராயன் பட கதை இதுதானா?.. சும்மா ரகளையா இருக்குமே.. தீயாய் பரவும் தகவல்

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர்.

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

Here are the details about Dhanush 50 Movie Rayan Story

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லாவுடன் ஒரு படம், வடசென்னை 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

தனுஷ் 50: இதற்கிடையே நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. படமானது வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன கதை: சில நாட்களுக்கு முன்பு தனுஷ் 50 படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன. படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் தனுஷ் கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கெத்தாக நிற்க; அவருக்கு பின்னால் காளிதாஸ் ஜெயராமும், சந்தீப் கிஷனும் ஒரு ஃபாஸ்ட் புட் கடை செட்டப்பிலிருந்து எட்டி பார்க்கும்படி இருந்தார்கள். போஸ்டருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்தனர். இந்நிலையில் படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகளாக நடித்திருக்கிறார்களாம். ஃபாஸ்ட் புட் கடை நடத்திவரும் அவர்கள் எப்படி கேங்ஸ்டர் ஆனார்கள் என்பதுதான் கதை என கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் கதை அஜித்துக்காக செல்வராகவன் எழுதியது என்றும் அதனை தனுஷ் இயக்குகிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த செல்வராகவன், ராயன் கதை தனுஷுடையதுதான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இப்படி நடிப்பில் படு பிஸியாக இருக்கும் தனுஷ் தனது 50ஆவது படம் மட்டுமின்றி இன்னொரு படத்தையும் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக தனுஷின் உறவினர் வருண் என்பவரும், ஹீரோயினாக அனிகாவும் நடிக்கின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று இப்படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X