தலைவா ரிலீஸ் விவகாரம்: விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன சிம்பு...

Hope they solve the issue soon... Simbu tweets.
சென்னை: விஜய் ரசிகர்களுக்கு தலைவா பட விவகாரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என ட்வீட்டரில் ஆறுதல் வார்த்தைகள் கூறியுள்ளார் சிம்பு.

இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து இன்று ரிலீசாக இருந்த 'தலைவா' படம் சில பல காரணங்களால் தமிழகத்தில் மட்டும் நிலீசாகவில்லை. ஏற்கனவே, ஆன்லைனிலும், நேரடியாகவும் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு இன்ரு தலைவா நிலீசாகவில்லை என்ற செய்தி மிகவும் சோகத்தைத் தந்துள்ளது.

ஆங்காங்கே சில இடங்களில் சில ரசிகர்கள் கோபத்தில் பிரச்சினைகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பலர் வேறு மாநிலங்களுக்குச் சென்று தலைவாவை தரிசிக்க முடிவு செய்து விட்டனர்.

இன்று தன் ஹனி ஹன்சிகாவின் பிறந்த நாள் குதூகலத்தில் இருந்தபோதும், தன் சக நடிகரின் படம் ரிலீஸ் தாமதமாவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் சிம்பு. மேலும், இதனால் மனமுடைந்த விஜய் ரசிகர்களுக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து ட்வீட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது, 'விஜய் அண்ணா ரசிகர்களே, கவலைப்படாதீர்கள்... எப்போதும் மழை பொழிந்து கொண்டே இருக்காது. விரைவில் சூரிய வெளிச்சம் உதயமாகும். அதுவரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்...' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,இப்பிரச்சினை குறித்துக் கேள்விப்பட்டு தான் மிகவும் கவலைப்பட்டதாகவும், விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X