Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ 100 கோடி ஜீவனாம்சம்... விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார் ஹ்ரித்திக் ரோஷன்!
மும்பை: மனைவியிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
ஹிருத்திக் ரோஷனுக்கும் பழம் பெரும் இந்தி நடிகர் சஞ்சய்கான் மகள் சுசானேக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு
திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழிந்த நிலையில் ஹ்ருத்திக் ரோஷனுக்கும் சுசானேக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.
ஹ்ரித்திக் அறிவிப்பு
சுசானே என்னை விட்டு பிரிய முடிவு செய்து விட்டார் என்று ஹ்ருத்திக் ரோஷனே அறிவித்தார். இதேபோல, சுசானேவும் விவாகரத்துக்கு தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.
அர்ஜுன் ராம்பாலுடன் உறவு
சுசானேவுக்கும் இந்தி நடிகர் அர்ஜுன் ரம்பாலுக்கும் நெருக்கமான உறவு உள்ளதாகவும் இதுதான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்றும் இந்திப் பட உலகில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.
ரூ 100 கோடி
மனைவியை பிரிவதற்கு ஹ்ருத்திக் ரோஷன் ரூ.100 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மனுக்கள் தாக்கல்
இந்த நிலையில் தான் மும்பை பாந்த்ரா நீதி மன்றத்தில் ஹ்ருத்திக் ரோஷன் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இதுபோல சுசானேவும் ஹிருத்திக்கை விவாகரத்து செய்ய தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். இது பரஸ்பர சம்மதத்தின் பேரிலான விவாகரத்து என்பதால், சீக்கிரமே தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்.