Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மனைவிக்கு ரூ 400 கோடி ஜீவனாம்சம் தரும் ஹ்ரித்திக் ரோஷன்!
விவாகரத்துக்கு சம்மதிக்க மனைவி சுசானேவுக்கு ரூ 400 கோடியை ஜீவனாம்சமாகத் தர சம்மதித்துள்ளார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.
இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானேவும் காதலித்து 2000 - ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்படுகிறது.
விவாகரத்து
இருவரும் விவாகரத்து செய்து கொள்வதை ஹ்ரித்திக் ரோஷனே அதிகார பூர்வமாக அறிவித்தார். விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
ரூ 400 கோடி
இந்த நிலையில் விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹ்ரித்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சுசானே கேட்டுள்ளார்.
இதற்கு ஹ்ரித்திக் ரோஷனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இதுகுறித்து ஹ்ரித்திக் ரோஷன் கூறுகையில், "எனது காதலுக்கு நான் செலுத்தும் மிகப் பெரிய மரியாதை இது. நான் இல்லாத நிலையில்தான் சுசானேவின் முகத்தில் புன்னகை பிரகாசமாக இருக்கும் என்றால், அதற்காக நான் எதையும் செய்வேன். என் வாழ்க்கையில் சுசானேவின் காதல் நிலைத்திருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
சுசானே
இதுகுறித்து சுசானே அளித்துள்ள விளக்கத்தில், "இனி தனிப்பட்ட நபர்களின் விருப்பம் இது. எங்களுக்கு இரு அழகான குழந்தைகள் உள்ளனர். அவர்களை பாதுகாத்து வளர்த்தெடுப்பது எங்கள் இருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். அதை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.
சொத்துகள்
ஹ்ரிதிக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜுஹூ கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது. பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது.
சிங்கப்பூரில் ஒரு வீடு உள்ளது. ஆனால் இந்த வீடு சுசானே பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
முதல் முறை
இந்தி திரைப்பட உலகில் இந்த அளவு பெரிய தொகை கொடுத்து ஜீவனாம்சம் பெற்ற ஒரே மனைவி சுசானேதான்.