மீண்டும் மூளை அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்கா செல்லும் நடிகர் ரித்திக்?
மும்பை: மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் ரித்திக் ரோஷன் அமெரிக்கா சென்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
நடிகர் ரித்திக் ரோஷனுக்கு படப்பிடிப்பின்போது தலையில் அடிபட்டது. இதையடுத்து அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் நடந்தது. இதை அடுத்து உடல் நலம் தேறிய அவர் க்ரிஷ் 3 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதாம். இதனால் ஓய்வில் இருக்கும் அவர் அமெரிக்காவுக்கு சென்று மீண்டும் மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் கத்ரீனா கைஃபுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வரும் 27ம் தேதியும், கரீனா கபூருடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதமும் துவங்கவிருந்தது. ஆனால் தற்போது ரித்திக்கின் உடல் நிலை காரணமாக இந்த 2 படங்களின் ஷூட்டிங் தள்ளிப்போடப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications












