Don't Miss!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை முடிந்தது: நலமாக உள்ளார்
மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு இன்று மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிற்பகலில் மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு சுமார் 50 நிமிடங்கள் அறுவை சிகிச்சை நடந்தது. மதியம் 3 மணிக்கு அறுவை சிகிச்சை அறையில் இருந்து அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்.
அவருக்கு துணையாக அவரது பெற்றோர், மனைவி சூசன் மற்றும் சகோதரி சுஹானா ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். ரித்திக் இன்னும் 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று அவரது தந்தை ராகேஷ் ரோஷன் தெரிவித்தார்.
முன்னதாக அவர் நேற்று மாலை தனது மகன்கள் 2 பேரிடமும் தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார்.
உடல் நலம் சரியில்லாததால் தான் ரித்திக் அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக அவருக்கு பாங் பாங் படப்பிடிப்பின்போது தலையில் அடிபட்டது. இதையடுத்து தான் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.