Don't Miss!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூசன் ரூ.400 கோடி ஜுவனாம்சம் கேட்டாரா?: நடிகர் ரித்திக் ரோஷன் கோபம்
மும்பை: தனது முன்னாள் மனைவி ரூ.400 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக வெளியான தகவல்களால் நடிகர் ரித்திக் ரோஷன் கோபம் அடைந்துள்ளார்.
4 ஆண்டுகள் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டவர்கள் நடிகர் ரித்திக் ரோஷனும், சூசனும். ரிஹான், ரிதான் என்ற 2 குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர்.
திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்து
பிரிவு குறித்து அறிவித்த ரித்திக் மற்றும் சூசன் கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர்.
ரூ.400 கோடி
சூசன் ரித்திக்கிடம் ரூ. 400 கோடி ஜீவனாம்சம் கேட்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பணமா?
நிதி மற்றும் பணம் குறித்த பேச்சே ரித்திக் மற்றும் சூசன் இடையே எழவில்லை. பணம் அவர்களுக்கு முக்கியம் இல்லை என்பதால் அது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அவர்கள் தீர்மானித்துவிட்டனர் என்று அவர்களின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
சூசன்
சூசன் யாரையும் சார்ந்திராத பெண். அவரே தனக்கு சொந்தமான தொழிலை நடத்தி வருகிறார். அதனால் விவாகரத்தில் பண பிரச்சனை என்பது கட்டுக்கதையே என்று அந்த நண்பர் தெரிவித்தார்.
|
ரித்திக்
கற்பனை செய்திகள். எனது அன்புக்குரியவர்களை அவமதிப்பதாகும். என் பொறுமையை சோதிக்கிறார்கள் என்று ரித்திக் ரோஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.