யாரையும் நான் ஆதரிக்கவில்லை..: வாக்களித்த பின் ரஜினி பேட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
லோக்சபா தேர்தலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது கடமை என்றார்.

அப்போது நீங்கள் தேர்தலில் யாரை ஆதரிக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றார்.
தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிவீட்டுக்கு சென்று சந்தித்தார். அதற்கு முன்னதாக மதிமுக பொதுச்செயலர் வைகோவும் ரஜினியை நேரில் சந்தித்தார். இதனால் ரஜினி தங்களது அணியை ஆதரிப்பதாக பாஜகவினர் கூறிவந்தனர்.
ஆனால் ரஜினிகாந்த் மோடியுடனான சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது என்றே கூறிவந்தார். இன்றும் வாக்களித்த பின்னரும் தாம் தேர்தலில் யாரையுமே ஆதரிக்கவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது,.


Click it and Unblock the Notifications











