Don't Miss!
- Finance PF பேலன்ஸ் தொகையை எளிதாக தெரிந்துகொள் 4 எளிய வழிமுறைகள்..!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விவசாயி ஆகிறார் விஷால்... தஞ்சையில் நிலம் வாங்கி நெல் பயிரிடப் போவதாக அறிவிப்பு!
சென்னை: தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின், நெல் திருவிழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் விஷால் பேசும்போது '' எந்த நிலையிலும் விவசாயிகள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கக் கூடாது. பிரச்சினைகளுக்கு தற்கொலையைத் தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் பாதி பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள்.
அதனால் தற்கொலை முடிவைக் கைவிட்டு வாழ்ந்து போராடி வெற்றி பெறுங்கள். கஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன்.
வெறுமனே பத்திரிக்கைககளில் படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. அதனால் தஞ்சாவூர் பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன்.
நேரடியாக விவசாயத்தில் இறங்கினால் தான் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியும்'' என்றார்.
தொடர்ந்து சமூக சேவகியும், நடிகையுமான ரோகினி பேசும்போது '' எந்த ஒரு விவசாயியையும் தோல்வி காண விடமாட்டோம். விவசாயத்தோடு, தைரியத்தையும் சேர்த்து விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.