எனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போயிடுச்சே: சிவகார்த்திகேயன் கவலை
சென்னை: எனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் தனது தந்தையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார். இதை அவர் பல விழாக்களில் கூறி வருத்தப்பட்டுள்ளார், சில நேரங்களில் கண் கலங்கியுள்ளார்.
தான் இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து மகிழ தந்தை உயிருடன் இல்லையே என்று அவர் கவலைப்படுகிறார்.
நினைவு தினம்
சிவகார்த்திகேயனின் தந்தை இறந்து இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவர் அவரை பற்றி பெருமையாக ட்வீட்டினார். அவருக்கு கடைசியாக தண்ணீர் கொடுத்தவன் நான் தான் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கவலை
காவல் துறை அதிகாரி ஒருவர் தனது தந்தையை பற்றி பெருமையாக ட்வீட்டியதை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கவலையாகிவிட்டது. தன் தந்தை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்பதில் பெருமை அடையும் சிவகார்த்திகேயனுக்கு அவருடன் அதிக வருடங்கள் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது.
அதிர்ஷ்டம்
காவல் துறை அதிகாரியின் ட்வீட்டை பார்த்த சிவா அளித்துள்ள பதிலில், "என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது.. அவரின் நினைவுகளுடன் வாழ்கிறேன்...என் ரோல் மாடலுடன் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன். மிஸ் யூ அப்பா என்று தெரிவித்துள்ளார்.
ஆறுதல்
அப்பாவை நினைத்து சிவகார்த்திகேயன் ஃபீல் பண்ணுவதை பார்த்த அவரின் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்று ஆறுதல் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











