Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா? - கவுதம் கார்த்திக் விளக்கம்
சென்னை: என்னமோ ஏதோ படப்பிடிப்பில் நண்பர்களுடன் போய் தொந்தரவு செய்ததாக வந்த செய்திகளை மறுத்தார் நடிகர் கவுதம் கார்த்தி.
ரவிபிரசாத் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் என்னமோ ஏதோ. இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் மற்றும் நிகிஷா பட்டேல் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ரவிபிரசாத் லேபில் நடந்தது.
படத்தின் இயக்குநர் ரவி தியாகராஜனிடம், தலைப்பு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "படத்தில் என்னமோ ஏதோ இருக்கிறது என்று ரசிகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இளைஞர்கள் மனதில் உடனே பதிய வேண்டும் என்ற நினைப்பில் இந்தத் தலைப்பை வைத்தோம். மற்றபடி விசேச காரணங்கள் இல்லை," என்றார்.
ஹீரோ கவுதம் கார்த்திக்கிடம், இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது உங்கள் நண்பர்களையெல்லாம் வரவழைத்து, ஷூட்டிங்கைக் கெடுத்துவிட்டதாகவும், இதனால் தயாரிப்பாளர் உங்கள் மீது கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறதே...? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ரவிபிரசாத், "அப்படி எதுவும் நடக்கவில்லை. நானே இப்போதுதான் இந்த தகவலை கேள்விப்படுகிறேன், என்றார்.
பின்னர் ஹீரோ கவுதம் கார்த்திக் கூறுகையில், "இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் என் படப்பிடிப்புகளுக்கு எனது மிக நெருங்கிய நண்பன் - என் மேனேஜர்- ஒருவரை அழைத்துச் செல்வது வழக்கம். அவரிடம் ஏதாவது கேட்டு அவர் மறுத்த கோபத்தில் இப்படி தகவலைப் பரப்பியிருக்கலாம்," என்றார்.