Don't Miss!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நான் எந்த உத்தரவாதமும் தரவில்லை - ரஜினிகாந்த்
பைனான்சியர் போத்ராவிடம் தனுஷின் அப்பா இயக்குநர் கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு தான் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வட சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவிடம் கஸ்தூரிராஜா ரூ 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்தத் தொகையை அவர் திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது மோசடி வழக்குத் தொடர்ந்தார் போத்ரா. அதில், தான் வாங்கிய கடனுக்கு ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துள்ளதாக தன்னிடம் கூறித்தான் கஸ்தூரிராஜா கடன் வாங்கினார் என்றும், இப்போது கடனை திருப்பித் தராததால், ரஜினியை இதில் தலையிடக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது நீதிமன்றம்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மனு தாக்கல் செய்துள்ள ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் உத்தரவாதம் வழங்கவில்லை என்றும், தமது பெயருக்கு களங்கம் விளைவிக்க பைனான்சியர் போத்ரா முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் பைனான்சியர் போத்ரா மனுவை தள்ளுபடி செய்யவும் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.