Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷாரூக் நடிக்கவிருந்த படத்தில் இப்போது அக்ஷய்!
தீன் மார் கான் என்ற தலைப்பில் அடுத்த படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார் பரா கான். ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர் இவர். மே ஹூன் நா படத்தை எடுத்தவர்.
இடையில் என்ன நடந்ததோ... அந்தப் படத்தில் இப்போது நடிப்பவர் அக்ஷய் குமார்.
இதுபற்றிக் கேட்டால், "ஏன் நான் அந்தப் படத்துல நடிக்கிறதுல உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?" என்கிறார் தன் வழக்கமான பாணியில்.
"பரா கானும் நானும் நெருங்கிய நண்பர்கள். பராவின் கணவருடன் இணைந்து ஏற்கெனவே நான் படங்கள் செய்திருக்கிறேன். எனவே நாங்கள் சேர்ந்து படம் உருவாக்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இந்தப் பாத்திரம் ஷாரூக்கானுக்காக உருவாக்கப்பட்டதுதான். அதை நான் மறுக்கவில்லை.
பாலிவுட்டில் 180 படங்கள் உருவாகின்றன. நாங்கள் இருப்பதோ 10 ஹீரோக்கள்தான். எனவே யார் வாய்ப்பு யாருக்குப் போனாலும், தொழில் பாதிக்காது" என்றார் கூலாக!.
மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த ஷாருக்-பரா இடையே மோதல் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அவரை நீக்கிவி்ட்டு அக்ஷயை கொண்டு வந்துள்ளார் பரா என்பது குறிப்பிடத்தக்கது.