Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இயக்குனராக வேண்டியவனை நடிகனாக்கிட்டாங்க: நடிகர் நிரந்த்!
இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்ட தன்னை நடிகராக்கிவிட்டனர் என நடிகர் நிரந்த் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் சினிமாவில் தடம் பதிக்க ஆசை என்று 'சந்தோஷத்தில் கலவரம் 'படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நடிகர் நிரந்த் கூறியுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் நடிகர் நிரந்த். சமீபத்தில் வெளியான 'சந்தோஷத்தில் கலவரம்' படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
இவர் ஏற்கெனவே கன்னடத்தில் 'லைப் பூ சூப்பர் 'என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி.
மீ டூ பற்றி நான் 'அப்படி' சொல்லவே இல்லை, எடிட் பண்ணிட்டாங்க: ப்ரீத்தி ஜிந்தா
கன்னட படம் கார்ணி
இரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் 'கார்ணி'. இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வேண்டும் என்கிறார் நிராந்த்.
தமிழ் தடம் பதிக்க ஆசை
இதுகுறித்து அவர் கூறியதாவது, "தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தோற்றத்தை விட திறமையை வரவேற்பவர்கள் ; ஆராதிப்பவர்கள் .அந்த நம்பிக்கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.
இயக்குனர் கனவு
நான் இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்க வாய்ப்புகள் வந்தன. இதை விட மாட்டேன். எனக்கு எந்த வகையிலாவது சினிமாவில் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
நடிகனாக மட்டுமே அறியப்பட வேண்டும்
நடிப்பைப் பொறுத்தவரை சினிமாவில் நான் ஒரு கதாநாயகன் என்றோ நட்சத்திரம் என்றோ நினைக்க மாட் டேன். நான் ஒரு நடிகன். அதுவும் இயக்குநரின் நடிகன் என்றிருக்கவே விருப்பம்.
அனைத்துமே சகோதர மொழிகள் தான்
தென்னக மொழிகள் அனைத்துமே சகோதர மொழிகள்தான் எனவே தமிழோ தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ கவலையில்லை. நல்லவனோ கெட்டவனோ கவலையில்லை கதாபாத்திரம் மட்டுமே தனக்கு முக்கியம்", என்கிறார் நிராந்த்.