சமந்தாவுடன் பார்ட்டிக்கு போகணும், அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும்: ராணா
ஹைதராபாத்: ஒவ்வொரு வார இறுதியிலும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புவதாக நடிகர் ராணா டக்குபாதி தெரிவித்துள்ளார்.
ராணா என்றதுமே இத்தனை நாட்களாக த்ரிஷாவின் காதலர் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இனியும் அவர் பெயரை த்ரிஷாவுடன் பயன்படுத்த வேண்டியது இல்லை. ஏனென்றால் த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராணா தனது முன்னாள் காதலியான இந்தி நடிகை பிபாஷா பாசுவுடன் சேரவே த்ரிஷாவை பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணா தெலுங்கு டிவி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புகிறேன். நான் சந்தித்த மனிதர்களில் அஜீத் மற்றும் அனுஷ்கா தான் மிகச் சிறந்தவர்கள் என்றார்.
இப்போ என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ராணா?
Comments


Click it and Unblock the Notifications