விஜய்யை நான் பார்க்கவே மாட்டேன்.. தங்கச்சி மாதிரி இருக்கவங்க ஓபன் டாக்
சென்னை: தமிழ்நாட்டு முதலமைச்சராக விஜய் பதவியேற்றது அவரது ரசிகர்களுக்கும்,தொண்டர்களுக்கும் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக அடுத்த 20 வருடங்களுக்கு அவரது ஆட்சிதான் நடக்கும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளரும், விஜய்யின் தீவிர ரசிகையும், அவரை அண்ணா, அண்ணா என்று அழைப்பவருமான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே ஆட்சியை பிடித்திருக்கிறார். முதல் தேர்தலிலேயே இப்படி ஒரு சம்பவத்தை அவர் செய்வார் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர்கூட இப்படி முதல் தேர்தலில் முதலமைச்சராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையிலிருந்து நான்காவது ஆளாக அவர் மாநிலத்தை ஆட்சி செய்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

நிகழும் சந்திப்புகள்: முதலமைச்சரானதிலிருந்து திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சந்தித்து அவரை வாழ்த்திவருகிறார்கள்.நேற்று முன்தினம் கூட அவரை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சந்தித்து வாழ்த்து கவிதையை விஜய்யின் புகைப்படத்தோடு சேர்த்து ஃப்ரேம் செய்து பரிசளித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் அதீத கவனத்தை பெற்றன.
அர்ச்சனா கல்பாத்தி: இதற்கிடையே விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கே அர்ச்சனா சென்றிருந்தார். விஜய்க்கு ஏஜிஎஸ் தயாரிப்பு குழுமம் ரொம்பவே நெருக்கமானது. பிகில், கோட் உள்ளிட்ட படங்களை அந்த நிறுவனம்தான் தயாரித்தது. இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் சக்கைப்போடு போட்டதாக ஏஜிஎஸ் தெரிவித்திருந்தது. ஏஜிஎஸ் குழுமத்தில் அர்ச்சனா கல்பாத்தி விஜய்யின் வெறித்தனமான ரசிகை ஆவார்.
விஜய்யிடமும் மதிப்பு: சிறு வயதிலிருந்தே அவரை ரசித்து வந்த அர்ச்சனா; அவரை வைத்து படம் தயாரித்ததை சந்தோஷத்தோடு செய்தார். விஜய்யிடமும் அர்ச்சனா குட் புக்கில்தான் இருக்கிறார். அதனால்தான் தனது பதவியேற்பு விழாவுக்கு அவரை அழைத்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு சென்றது குறித்தும், விஜய் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அர்ச்சனாவின் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு சென்றேன். அப்போது அவரை நினைத்து பெருமையாக இருந்தது. இதிலும் அவர் இன்ஸிபிரேஷன் தான். ஏனெனில் ஸ்க்ராட்ச்சிலிருந்து ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். சின்ன வயதிலிருந்தே நான் விஜய்யின் தீவிரமான ரசிகை. அவர் எங்கள் அலுவலகத்துக்கு வருகிறார் என்று தெரிந்தால் நான் அவரை சந்திக்கவே மாட்டேன். ஏனெனில் ஒரு ஹீரோவை பற்றி நாம் நினைத்திருப்பது ஒன்றாக இருக்கும். அருகில் சென்றால் வேறு மாதிரி இருப்பார். அவரோடு பணியாற்றியபோதுதான் அவரை பார்த்தேன். அவர் எப்போதும் ஒரே மாதிரிதான் என்பது புரிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
