Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை சினிமாவை விட்டு விரட்டிடுவாங்களோன்னு பயந்தேன்: சூர்யா
சென்னை: என்னை சினிமாவை விட்டு தூக்கி எறிந்துவிடுவார்களோ என்று பயந்தேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யா தனது நண்பர் விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் எங்கெங்கே எங்கெங்கே என்ற பாடலை சூர்யா ஓடி, ஓடியே ஓட்டியிருப்பார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல் காட்சி வந்தால் நடந்து, ஓடி நாட்களை கழித்தார். பின்னர் ஒரு வழியாக டான்ஸ் ஆடத் துவங்கினார். மேலும் நடிப்பிலும் கலக்கத் துவங்கினார். இந்நிலையில் சூர்யா தனது திரையுலக பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிக்கத் தெரியாது, டான்ஸ் தெரியாது
தான் நடிக்க வந்த புதிதில் தனக்கு நடிக்கத் தெரியாது என்றும், தன்னம்பிக்கையோ, ஞாபக சக்தியோ இல்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு டான்ஸ் ஆடவோ, ஸ்டைலாக சண்டை போடவோ தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
விரட்டிவிட்டுவார்களோ என்று பயந்தேன்
ஆரம்ப காலத்தில் தன்னை சினிமாவை விட்டு விரட்டிவிட்டுவிடுவார்களோ என்று சூர்யா அஞ்சியுள்ளார்.
சின்சியாரிட்டி தான் என் பலம்
எதுவும் தெரியாமல் நடிக்க வந்தாலும் அனைத்தையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் என்றார் சூர்யா. அவரது அர்ப்பணிப்பு தான் பெரிய பலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரகுவரன் கொடுத்த அட்வைஸ்
சூர்யாவின் திரையுலக பயணம் அவ்வளவாக பிக்கப்பாகாதபோது மறைந்த நடிகர் ரகுவரன் தான் அவருக்கு புத்திமதி கூறியுள்ளார். முதலில் சிவகுமாரின் மகன் என்பதில் இருந்து வெளியே வந்து உனக்கென்று ஒரு பெயர் எடு என்று ரகுவரன் அறிவரை கூறினாராம்.