Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல்
சென்னை: நடிகை கவுதமியை பிரிந்தது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் மனம் திறந்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி ட்விட்டரில் அறிவித்தார்.
இது குறித்து கமல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
கவுதமி
கவுதமிக்கு எது நிம்மதியை அளித்தாலும் எனக்கு சரி. தற்போது என்னுடைய உணர்ச்சிகள் முக்கியம் இல்லை. கவுதமி மற்றும் சுப்பு சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டியது தான் முக்கியம்.
நான் இருக்கிறேன்
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு எப்பொழுது எது தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
மகள்கள்
எனக்கு ஸ்ருதி, அக்ஷரா மற்றும் சுப்புலட்சுமி என 3 மகள்கள் உள்ளனர். இந்த உலகிலேயே நான் தான் மிகவும் அதிர்ஷ்டக்கார தந்தை என்று நினைக்கிறேன் என்றார் கமல்.
புற்றுநோய்
கவுதமிக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கமல் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அண்மையில் கமல் கீழே விழுந்து காலில் அடிப்பட்டபோது கவுதமி அவருக்கு ஆதரவாக இருந்தார். ஒருத்தருக்கொருத்தர் உதவியாக இருந்த நிலையில் பிரிந்துவிட்டனர்.