Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
கட்சிகளின் உருட்டல், மிரட்டலுக்கு பணிய மாட்டாராம் 'மெட்ராஸ் கஃபே' ஜான் ஆபிரகாம்
டெல்லி: மெட்ராஸ் கஃபே தொடர்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என்று கூறி அதற்கு தடை விதிக்குமாறு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுக ஆகியவை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில் படத்தை தயாரித்து நடித்துள்ள ஜான் ஆபிரகாம் கூறுகையில்,
நான் புதிய தயாரிப்பாளர். இதுவரை ஒரு படம் மட்டுமே ரிலீஸ் செய்துள்ளேன் என்கின்றனர். மெட்ராஸ் கஃபே போன்ற படத்தை யாராவது எடுக்க வேண்டும். கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது. வரும் காலத்திலும் இது போன்ற படங்களை எடுப்போம். இது போன்ற படங்களில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இந்த ஜனநாயக நாட்டில் எனக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்றார்.