Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உலகிலேயே சகிப்புத் தன்மை அதிகம் உள்ள நாடு இந்தியாதான்!- விவேக் ஓபராய்
சென்னை: உலகிலேயே சகிப்புத் தன்மை அதிகம் கொண்ட நாடு இந்தியாதான் என்று நடிகர் விவேக் ஓபராய் கூறினார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் ஆமிர்கான் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிகர் என்ற முறையில், அவர் மீது நான் அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆனால், உலகிலேயே இந்தியாதான் சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட நாடு என்பது எனது கருத்தாகும்.
புனிதப் போர் என்ற பெயரில்...
உலக நாடுகள், 'புனிதப் போர்' என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன. ஒரு மதத்தினர், மற்றொரு மதத்தினருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவிலோ பிறருடன் சேர்ந்து வாழ்வது குறித்து நாம் கற்றுக் கொண்டிருந்தோம்.
பெருமை
அனைத்து மதங்கள், சித்தாந்தங்கள், ஆலோசனைகள், அரசியல் ஆகியவற்றின் சங்கமாக இந்தியா உள்ளது. இதை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். இதுபோன்ற நாட்டில் வாழ்வதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
இந்த நாட்டில்தான் எல்லாம்
நாட்டுக்கு பங்களிப்பை அளிப்பதுதான், உலகிலேயே பெரிய விஷயம் ஆகும். ஆதலால், நான் இந்த நாட்டிலேயே வாழ்வேன்; இந்த நாட்டில்தான் சாவேன்," என்றார் விவேக் ஓபராய்.
சர்ச்சைப் பேச்சு
ஹிந்தி நடிகர் ஆமிர்கான் அண்மையில் பேசும்போது, நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாகவும், இதனால் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆமிர்கானின் கருத்துக்கு பாஜக, சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
விளக்கம் அளித்த பிறகும்..
ஏற்கெனவே தனது பேச்சுக்கு நேற்றே நீண்ட விளக்கம் அளித்துவிட்டார் ஆமிர்கான். இருந்தாலும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன.