பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தால் இந்த நடிகர் ஜன்னலை எதை வைத்து மறைப்பார் தெரியுமோ?
மும்பை: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தன் வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்தால் ஓவியங்களை வைத்து ஜன்னலை மறைப்பாராம்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது நண்பர் ஆதிராஜ் சீமருடன் சேர்ந்து காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் அவர் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சி மூலம் சித்தார்த் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிய வந்துள்ளது.

சித்தார்த்
சித்தார்த் பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சிறிய வீட்டில் 2 பேருடன் தங்கியிருந்தார். அதில் ஒருவர்தான் ஆதிராஜ். கரண் நிகழ்ச்சிக்கு வந்து பெண்கள் பற்றி பேசாமலா?. ஆதிராஜும் சித்தார்த்தின் டேட்ஸ் பற்றி பேசியுள்ளார்.

பெண்கள்
ஒரு நாள் இரவு சித்தார்த் தாமதமாக வீட்டிற்கு வந்தார். என் அறை கதவை தட்டி ப்ரோ உங்க ஓவியங்களை நான் கொஞ்சம் எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். அவர் ஒரு பெண்ணை அழைத்து வந்ததால் ஜன்னலை மறைக்க அந்த ஓவியங்களை எடுத்துச் சென்றார். அந்த ஜன்னல் ரொம்பவே பெரியது என்றார் ஆதி.

திரை
சித்தார்த் எதற்கு ஓவியங்களை எடுத்துச் சென்றார் என்று எனக்கு தெரிய வந்ததும் அவருக்கு வெட்கமாகிவிட்டது. புது வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக ஜன்னல்களுக்கு திரை போடுவேன் என்றார். அப்பொழுது ஒரு திரை வாங்கி போடக் கூட முடியாத நிலை என்று ஆதிராஜ தெரிவித்தார்.

ஜன்னல்
ஒவ்வொரு முறையும் நான் யாரையாவது அழைத்து வந்தால் வீட்டில் உள்ள மற்ற இருவருக்கும் போன் செய்து வீட்டை சுத்தம் செய்யுங்கள் என்பேன். அவர்களுக்கு நான் போன் செய்ததுமே ஓவியங்களை மறைத்து வைத்துவிடுவார்கள். நான் வந்து அதை தேடி எடுக்க வேண்டும் என்றார் சித்தார்த்.


Click it and Unblock the Notifications











